பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்று தூங்காது
வா வா வா ...
பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒருகோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத சாபம்
தனிமையே போ போ இனிமையே வா
பூவும் முள்ளாய் மாறிப்போகும்
காவலில் நிலை கொள்ளாது தாவிடும் மனது
காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது
ஆசை கொள்ளாமல் கொள்ளும் அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைத்த் தீண்டாடும் மோகம் இதயம் உன்னோடு கூடும்
இதயமே ஓ உதயமோ சொல்
நீரும் வேரும் சேர வேண்டும்